அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, November 13, 2010

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு

பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info



ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு  விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

 

வின்மணி சிந்தனை
நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது, உண்மையான
நட்பு எங்கு இருந்தாலும் மாறாதது.

 

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ?
2.வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது ?
3.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
4.கங்கை நதி கடலில் வந்து சேரும் இடத்தின் பெயர் என்ன ?
5.ஸ்புட்னிக் என்பது என்ன ?
6.புகழ் பெற்ற லிங்கராஜா ஆலயம் எங்குள்ளது ?
7.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.காந்தியடிகள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
9.” கலிங்க நாட்டின் “ இன்றைய பெயர் என்ன ?
10.கானுவா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார் ?
பதில்கள்:
1.வைரம், 2.ப்ரோடிட்,3.சுப்ரீம் சோவியத்,4.நவகாளி,
5.செயற்க்கைக்கோள்,6.புவனேஸ்வர்,7.ஸ்பெர்ரி,
8.இரண்டாவது வட்ட மேஜை மாநாடு, 9.ஓரிஸ்ஸா.
10.ராணா சங்கர்.

 

இன்று நவம்பர் 14


பெயர் : ஜவகர்லால் நேரு,
பிறந்த தேதி : நவம்பர் 14, 1889
முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்
ஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலை
பெற்றபோது அதன் முதலாவது தலைமை

அமைச்சராகப் பதவியேற்றார்.1964, மே 27 -ல்
காலமாகும்
வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்..சுதந்திர

இந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில் பண்டிட்ஜி
என்றும்
அழைக்கப்பட்டார்

18 comments:

  1. This is very useful. Thanks a lot.

    ReplyDelete
  2. @ Theerthagiri
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிக மிக பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  4. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. எவ்ளோ புதுமையான தகவல்கள்.. எவ்ளோ முக்கியமான விஷயங்கள்.. உங்கள் பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அருமை.. தொடருங்கள்

    ReplyDelete
  6. @ கவிதை காதலன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இனிய‌ ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. @ Jiyath
    வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete
  9. I have a problem in my last page of 'Subscribe to: Post Comments (Atom)'.When i clicks my link it shows "Invalid content type: jayonline.blogspot.com".so i remove my unwanted template.Still i get a problem whether i changed my background template.May i get your help plz??

    ReplyDelete
  10. Dear winmani,
    i fix my problem.Thats my home page contains 4 posts.But when we clicks to view the single page it shows the feed.

    ReplyDelete
  11. I was looking for a free document scanning software on the Internet. I had used Textbridge for the past 8 years with many versions of Windows OS and I was not willing to buy another expensive scanning software any more. Then I found some interesting ones online, like Free OCR, etc. Though not as good as commercial OCR softwares, they did produce promising results to me.

    ReplyDelete
  12. @ Harry
    விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

    ReplyDelete
  13. பிறந்த தேதி : நவம்பர் 14, 1964(MISTAKE IN YEAR)
    முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்
    ஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா
    விடுதலை பெற்றபோது அதன் முதலாவது
    தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.1964,
    மே 27 -ல் காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து
    வந்தார்..சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில்
    பண்டிட்ஜி என்றும் அழைக்கப்பட்டார்

    ReplyDelete
  14. @ jabastin
    மிக்க நன்றி , தகவலை சரி செய்தாச்சு.

    ReplyDelete

Post Top Ad