மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, December 5, 2010

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.

நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக
ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup)  செய்து வைக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4212" align="aligncenter" width="450" caption="மொபைல் பேக்கப்"][/caption]

மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள்
கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்
அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்
துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல்
தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.mobyko.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்
கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும்
மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம்
மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என
அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால்
ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்பு இருக்கும் அனைத்து
இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில்
எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்
தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.


வின்மணி சிந்தனை
இறைவனை தரிசிக்கும் போது நம்மை அறியாமல் வரும்
கண்ணீர் அவர் மேல் நமக்கு இருக்கும் அன்பை காட்டுகிறது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரயில் குளிர்சாத பெட்டி வைத்த ஆண்டு என்ன ?
2.கனடாவின் தலைநகர் என்ன ?
3.சென்னையின் பரப்பளவு என்ன ?
4.மனிதன் முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளது ?
5.மகாத்மா காந்திக்கு எந்த வயதில் திருமணம் நடந்தது ?
6.தினசரி நாளிதழை அறிமுகப்படுத்திய நாடு எது ?
7.துப்பாக்கியை தேசியக்கொடியில் பொறித்திருக்கும் நகரம் ?
8.அரசாங்கம் வட்டிக் கடை வைத்து நடத்தும் நாடு எது ?
9.பாம்பின் விஷம் எந்த நோய்க்கு பயன்படுத்தபடுகிறது ?
10.லவ் ஆப்பிள் என்பது என்ன ?
பதில்கள்:
1.1937,2.ஒட்டவா,3.128 சதுர கி.மீ, 4.14,5.13 வயதில்,
6.சீனா,7.மொசாம்பின்,8.மலேசியா,9.புற்றுநோய்.10.தக்காளி.


இன்று டிசம்பர் 5  
பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,
மறைந்ததேதி : டிசம்பர் 5, 1954

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின்
இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,
கட்டுரைகள், பயணக்கட்டுரைகள்
மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ்
பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய
விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. good news.

    i always read ur blog.

    urs TNPSC Question & answer i regularly read.

    good work and continue ur social works

    ReplyDelete
  2. @ vasudevan.s
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. @ தமீம்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad