குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, September 25, 2010

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்

குழந்தைகள் தினமும் புதிது புதிதாக பல கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் இதில் நமக்கு பதில் தெரிந்திருந்தாலும் சொல்லிக்கொடுக்க
சில சமயங்களில் நேரம் இருப்பதில்லை இந்த குறையை நீக்கி
குழந்தைகளின் கேள்விக்கு இணையம் மூலம் பதில் கிடைக்கும்
எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



குழந்தைகள் சுட்டித்தனமாக மட்டுமல்ல அறிவுப்பூர்வமாகவும் பல
நேரங்களில் கேள்வி கேட்பதுண்டு அந்த வகையில் நம் குழந்தைகள்
கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லி நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.whyzz.com

இந்தத்தளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை
அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பலத்துறைக்கான
கேள்வி பதில்கள் இடம் பெற்றுள்ளது. செடிகொடிகள் , விலங்குகள்
எந்திரன்,ரோபோட், மனித உடல் வரை அனைத்து தரப்பு செய்திகளும்
விளக்கமாக எப்படி வேலை செய்கிறது அதன் பயன் என்ன என்பதை
தெளிவாக கூறியுள்ளனர். இண்டெர்நெட் என்றால் என்ன என்பதில்
தொடங்கி பலத்துறைகளுக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன,
நமக்கு தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து தகவல்களை
எளிதாக அறிந்து கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் அனைவரும்
எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான
ஆங்கிலத்தில் தகவல்கள் இருப்பதும் இதன் சிறப்பு. கண்டிப்பாக
இந்தப்பதிவு நம் குழந்தைகளுக்கும் பல துறைகள் பற்றி ஆராய்ச்சி
செய்யும் நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மக்கள் நலனுக்காக சேவை செய்யும் நபர்களிடம் இருந்து பணம்
பறிக்கும் அரசியல்வாதிக்கு தகுந்த நேரத்தில் இறைவன் தண்டனை
கொடுப்பான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பஞ்சவர்ண ஏரி எங்குள்ளது ?
2.வாலிபால் இந்தியாவில் எந்த ஆண்டு முதல்
விளையாடப்படுகிறது ?
3.அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் எந்த நாட்டுக்காரர்?
4.இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
5.ஹாவாய்த் தீவுகளை கண்டுபிடித்தவர் யார் ?
6.பல்லக்குத் தூக்கிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
7.யானைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் காணப்படும்
 பெரிய மிருகம் எது ?
8.இந்தியாவில் சூரிய பகவான் கோவில் எங்குள்ளது ?
9.எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக
மொழியாக உள்ளது ?
10.உலகின் மிகச்சிறிய மரம் எது
?

பதில்கள்:
1.ஆர்டிக் சமுத்திரத்தில், 2.1920,3.இத்தாலி,
4.எஸ்.ஆர்.அரங்கநாதன்,5.ஜேம்ஸ் குக்,6.சரோஜினி நாயுடு,
7. காண்டா மிருகம், 8.ஓரிஸா கொனார்க்,9.கனடா,
10.குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).

இன்று செப்டம்பர் 25 
பெயர் : உடுமலை நாராயணகவி,
பிறந்த தேதி : செப்டம்பர் 25, 1899

முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும்,
நாடக எழுத்தாளரும் ஆவார். அற்புதமான
சீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்ற இவர்
தொழிலால்தான் ஜாதி என்று நாராயணகவி
என்று பெயர் சூட்டிக் கொண்டு கவிஞர் இனமென்று
தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad