கூகுல் ஒஎஸ் வெளிவரும் தேதி மற்றும் வெளிவராத பிரத்யேக தகவல்கள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, January 10, 2010

கூகுல் ஒஎஸ் வெளிவரும் தேதி மற்றும் வெளிவராத பிரத்யேக தகவல்கள்

கூகுலின் மற்றுமொரு அதிசியம் தான் கூகுல் ஆப்ரேட்டிங் சிஸ்டம்
அனைத்து இதர சேவையையும் இண்டெர்நெட்டில் இலவசமாக வழங்க
காத்திருக்கிறது. இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் முதலில் நெட்புக்
கம்யூட்டரில் மட்டும் வர இருக்கிறது. கூகுள் மேப்ஸ்,ஜிமெயில்,
கூகுள் டாக்ஸ், கூகுள் வாய்ஸ் என்று அனைத்தும் இதனுடன் சேர்ந்து
வர இருக்கிறது. இதன் விலை $ 300 டாலரிலிருந்து தொடங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கூகுள் ஒஎஸ் கான்பிகரேசன் பற்றிய வெளிவராத சில தகவல்கள்

* 10.1 inch TFT HD ready, multi touch screen (1280×720)
*  2GB RAM
*  NVIDIA Tegra 2 chipset
*  Wi-Fi
*  ARM CPU (better performance and uses less power than Atom)
*  64GB SSD
*   3G
*   3.5mm audio jack
*   USB ports
*   Multi-card reader
*   4-6 cell batter with 8-12 hours of battery life
*    Webcam

இந்த  2010  ஆண்டின் கடைசியில் நவம்பர் அல்லது
டிசம்பரில் மக்களின் கையில் தவழும்.
கூகுல் ஓஎஸ் எப்படி இருக்கும் என்பதை பற்றி நேற்று வெளியான
ஒரு சிறப்பு விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.









[caption id="attachment_518" align="alignleft" width="150" caption="கொடிகாத்த குமரன்"] இன்று ஜனவரி 11[/caption]

பெயர் : திருப்பூர் குமரன்,
மறைந்த தேதி : ஜனவரி 11,1932
சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
தொடங்கிய போது அறவழியில் சென்ற
குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
இந்திய தேசியக் கொடியை கையில்
வைத்துக்கொண்டே உயிர் துறந்தார்.
நம் நாடு இன்று உமக்காக தலை
வணங்குகிறது.

3 comments:

  1. உங்கள் இடுக்கைகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete
  2. கொடிகாத்த குமரனுக்கு நம்முடைய வணக்கத்தை செலுத்துவோம்.

    ReplyDelete
  3. சினிமாவில் வரும் விஜய், சிம்பு பற்றி தப்பாக பேசினால் கொந்தளிக்கும் நாம், அவர்களுடைய எல்லா திரைப்படங்கள் வெளியாகும் தேதியை மறக்காமல் உள்ள நாம், நம் தேசத்திற்காக உயிர் நீத்த தியாகி கொடி காத்த குமரன் போன்றோரை மறந்து விட்டோம்.

    அண்டை நாடுகள் நம் நாட்டின் மீது போர் தொடுக்க துடித்து கொண்டிருகிறது. நம் இளைங்கனோ காதலியின் பார்வையில் கரைந்து கொண்டு இருக்கிறான்.

    தமிழர்களை ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, சீனா போன்ற நாடுகளில் ஒரு நாயை விட கேவலமாக நடத்தி கொல்கிறார்கள். ஆனால் நாமோ நமக்கு துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை வெறும் பணத்திற்காக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம், இந்த நாடு எங்கே போகிறது!

    சுதந்திரத்திற்காக உயிரை விட்டனர் தியாகிகள் அன்று. வெறும் பணத்திற்காக நாட்டையே விற்கிறான் இன்றைய துரோகிகள்.

    ReplyDelete

Post Top Ad